Monday, December 3, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு:
நேற்று, இந்த படத்தை சத்யம் காம்ப்ளெக்ஸில் பார்த்தேன். தங்கர் பச்சான் மனித உணர்வுகளை படமெடுத்து கலக்கி விட்டார். ஒரு தகப்பன் என்பவன், பிள்ளைகளுக்காக சம்பாதித்தால் மட்டும் போதாது, பிள்ளைகளை அரவணைத்தும், தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்தும், வளர்க்கத்தெரியாத, அன்புள்ளம் பொங்கும், ஒன்றையும் தவறாக எடுத்துக் கொள்ளத் தெரியாத வெள்ளந்தியான பாத்திரம் ஏற்று வருகிறார் சத்யராஜ். அவருக்கு இணையாக அர்ச்சனா வெகு நன்றாக நடித்து அல்ல - வாழ்ந்து இருக்கிறார். கோவில் முன்பு, தன் கடைசி மகனின் காதலைத் தெரிந்து கொண்ட பிறகு, தனியே புலம்பும் காட்சியில் அசத்துகிறார் அர்ச்சனா!! அதையே ஒரு வசனமும் இல்லலாமல் உணர்ச்சிக்ளாலேயே உணர்துகிறார் சத்யராஜ்!.அவருக்கு இணையாக ரோகிணி, சத்யராஜுக்கு, எங்களையும், உங்களை மாதிரி, ஒருவருமற்றவராக்கி விட்டு விடாதீர்கள் என்று கூறும் போது, நம்மை கண் கலங்க வைக்கிறார். இன்னுமொறு காட்சியில் சத்யராஜ் நாசரை வழியனுப்பி வைக்கும் காட்சியில் தங்கர் நம்மை யோசிக்க வைக்கிறார். என்னதான், நண்பர்கள் என்றாலும், குடும்பத்திற்குள், நுழைந்து விட்டால், எப்படி, நட்பு, கூறு போடப்படுகிறது, என்பதை நாம் நன்கு உணர்கிறோம்.
எனக்குப் பிடித்த காட்சி : இறுதி காட்சியாக் காட்டப்படும், அந்த இளைஞன், நான் சென்னைக்கு போக வேண்டுமா என யோசிக்கிறேன், என்பது, இக்கால இளைஞர்களிடையே . பெற்றோரை, தனியே தவிக்க விடக்கூடாது, என்கிற, நிச்சயமாக சேர வேண்டிய கருத்து.
தங்கர், தரமான படத்தைக் கொடுத்து, திரும்பவும், நிரூபித்தி விட்டார், தான் யார் என்பதை!!!
நிச்சயம், பல் வேறு விருதுகளை தட்டிக் கொண்டு போகப்போகிறது, ஒன்பது ரூபாய் நோட்டு!!!

Thursday, November 29, 2007

If you want a woman to be.........

If you want a woman who always take care of herself and thinks about only her self and not bothering about the counter part
If you want a woman who always goes away from the counter part and enjoy alone in the park and the swimming pool
If you want a woman who always roams around the city by expending all the money her counter part earns
If you want a woman who buys stuff on her own for herself and forces the counterpart to wear what she chooses
If you want a woman who makes a man to roam around the house as a maid and eats what he cooks
If you want a woman who gobbles all the money and telling people around that all she wants is money and not gifts from others
If you want a woman who never stays at home though stamped as a home maker and roams around the shopping malls every day or the other
If you want a woman who takes all the decisions starting from buying everything at home to making financial decisions
If you want a woman who forces the counterpart to make money illegally on her name
If you want a woman who takes decisions on the upkeep of the house and going away from the family traditions and culture
If you want a woman who manages all the money and finance of the house
If you want a woman who totally/wantedly ignores her own mother in law but comments about others’
If you want a woman who avoids visiting mother-in-law but needs only her husband
If you want a woman who makes the options of setting up the house holds things of her choice
If you want a woman who is dumb and making others dumb
If you want a woman who promptly updates about to other people’s mother-in-law
If you want a woman who never speaks to her husband in-front of others, but takes all the decisions at the background
If you want a woman who never opens her mouth on any kind of family discussion in front of others
If you want a woman who forces her counter part, not to take care of his parents
If you want a woman who talks ill about her in-laws, about their in capabilities and comparing with others
If you want a woman who plays double game with her counterpart and hides things from him
If you want a woman who keeps mumbling about her own counterpart whenever we meet
If you want a woman who keeps mumbling about her own self and the financial conditions of her own family
If you want a woman who has made use of her own mother-in-law as washing machine and dishwasher
If you want a woman who mumbles about her own mother-in-law, but never get rid of her for own selfish reasons
Ultimately, If you want a woman to be just a flowerpot!!!

I am not of that kind……. I am very sorry!!! I am woman of different caliber!!! You can never understand me and I can never expect you to understand me!!!

Monday, November 19, 2007

Freak Accident

Y'day, I met with a freak accident. We both went to a temple, came out towards the two wheeler. He started the vehicle and I was about to get into the pillion. Suddenly a big blow from my back and i could not balance and fell down. He yelled at me there is a car backing up and it has hit me already. I was about to get up and balance my self and before a fraction of second, there was a second big blow. I totally lost my balance and fell down completely. Scratches all over and before I recognize what is happening, He started to fight with the driver and gave a big blow on his face and everywhere. I told him to stopp.........I am OKKKKKKKKKK.... but He gave a big shot to that driver.

Now I am very much feeling for that driver. Poor guy, infront of the temple, he had to get big blows from him for a smaller mistake of not switching the car lights on, and reversing without thinking who is behind the car!!!!

Bad time for me and the driver and my husband's wrist which got hurt after the fight!!!!

Monday, November 12, 2007

Diwali Sweets

Celebrating Diwali!

Some years ago, when we celebrate Diwali, there would be some sort of expectation towards, wearing new dress, bursting crackers, to eat lot of sweets, share sweets among frineds relatives etc... We usually buy dresses for selective festivals like this and there was a value for it. We usually make sweets only for certain specific festivals with specific sweets and there was a value for it. We used to live in independent houses where in we will have a big space infront of the houses and bursting crackers in front of the house along with neighbours was a big fun.

Now a days all these values hase gone with the wind. Since people buy dresses for any occassions without hesitations and get the sweets from the sweet shops etc..those old age values has gone. Since people live in small petty flats, bursting crackers tradition has already gone. Since people get lot of sweets from outside and offices etc...no value for the sweets prepared at home and distributed by relatives. People give a bad look at the sweets made at home and the value for the effort and time spent on to make sweets and savories has already gone.

Recently i saw an event. Some one visiting somebody's home do not worry to share the sweets they get from office etc.. They pluck out the sweets they like and share the remains to the friends'/relatives place. I dont know what kind of culture it is..........

The eagarly served sweets/food is not given with any respect and they are all of given with the least value and no one wants to talk about it also.

The value for the old age tradition has totally gone...............

Wednesday, September 5, 2007

Today is Teachers' Day!!!


எனக்கு என்னுடைய 3வது வகுப்பு ஞாபகம் வந்து விட்டது.

டீச்சர் : எல்லொரும் கிழக்கே பார்த்து நிற்கிறோம். பிள்ளைகளே , உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்.
டீச்சர்: இல்லை தவறு. அனைவரும், என்னப்பார்த்து, திரும்பி நில்லுங்கள். உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!
டீச்சர்: இல்லை திரும்பியும் தவறு. அனைவரும், என்னப்பார்த்து, திரும்பி நில்லுங்கள். உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ரம்யா, இப்பொழுது நீ சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
ரம்யா: மேற்கு டீச்சர்.
டீச்சர்: சரியாக சொன்னாய் ரம்யா!
நான் : ???
டீச்சர்: எல்லொரும், வீட்டில் போய் படித்து விட்டு வாருங்கள், நாளை, நான் மறுபடியும், இதே கேள்வியை கேட்பேன், சரியா பிள்ளைகளே?
மறு நாள் ...
டீச்சர் : எல்லொரும் கிழக்கே பார்த்து நிற்கிறோம். பிள்ளைகளே , உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!
டீச்சர் : சரியாய் சொல்லிவிட்டாய் !, இன்று.
டீச்சர் : இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள். ம்ம்.. ரம்யா இப்பொழுது நீ சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
ரம்யா : மேற்கு டீச்சர் நான் (அவசர அவசரமாக!!) : டீச்சர், தவறாக சொல்லி விட்டாள்!. நம் முன் இருப்பது எப்பொழுதும் கிழக்குதானே?!?!
டீச்சர் : (என்னைப் பார்த்து, ஒரு முறைப்பாய்) வெளியே சென்று, நன்றாக நான் சொன்னதை நினைவு படுத்தி, படித்து விட்டு வா!!!
சிறிது நேரத்திற்க்குப் பிறகு, "ராஜேஸ்வரி, உள்ளே வா, திரும்பி, நில். உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!

அதற்க்கப்புறம், என் கையில் இருந்த புத்தகம், வெளியே, பறந்ததும், நான், ஒரு மணியளவு முட்டி போட்டுக் கொண்டிருந்ததும், பசுமையான நினைவுகள். நீண்ட நாட்களுக்கு, எது மேற்கு, என்கிற, சந்தேகம், எனக்கு இருக்கத்தான் செய்தது. இப்பொதும், யாருக்காவது, வழி சொல்லும் கட்டாயம் நேர்ந்தால், சத்கியம்மாக திசையை வைத்து சொல்வதேயில்லை. எல்லம் சுசீலா டீச்சர் ஞாபகம் தான்!!!


Wednesday, August 22, 2007

மனிதர்கள் நிறைந்த சமுதாயத்தில் மரங்களுக்கு இடமேது?


எனது அலுவலகத்தின் வாசலில், அழகிய பூத்துக்குலுங்கும், மரங்கள் இருந்தன. 6வது மாடியில் இருந்து அழகாய் அவை அசைவதை ரசித்து இருக்கிறேன். மழைக்காலங்களில், அவை பசேலென்று கண்ணுக்கு விருந்தளித்ததை நினைவு கூர்கிறேன்.


மனிதன் நடக்கவும், காரில் சொகுசாய் போகவும், பாலம் கட்ட, மரங்கள், இடைஞ்சலாகிப் போனதால், வெட்டி வீழ்த்திவிட்டனர்.


என் மனம் அழுகிறது. மரமே, இங்கு மனித எண்ணிக்கை அதிகப் பட்டுவிட்டது, அதனால் மரங்களுக்கு இங்கு இடமில்லை!


எங்கேயாவது காட்டில், மறு ஜென்மம் எடுத்துக்கொள்!!!

Tuesday, August 21, 2007

My Regrets in my life so far.........

1) Why am i a woman?
2) When I lost a colourful bag at my school when I was in II std
3) When I could not get through medical seat
4) Never I could impress my mother-in-law
5) Never I could impress my husband with my cooking
6) Never I was recognized by my brother and sister-in-law
7) Never I am able to involve in stock broking
8) Why my kids complaing that I am always driving them
.........

this will continue

Proud moments in my life so far.........

1) When I got a small silver coin for reciting the "Thiruvambavai' at my school when I was in
III std
2) When my big brother-in-law bought me a golden watch
3) When I got into my first job and got my first salary
4) When I gave birth to my Son
5) When I went to the US
6) When I got my salary in US $
7) When I learnt to drive around with confidence
8) When my husband bought me a house at R.A.Puram
9) When I got appreciation message delivered by Marlin, my American Manager
10) When my son scored 83% in French
11) When I got my IBM SOA certifications
12) Whenever I think of my husband!!!

Friday, August 3, 2007

நான் வாழும் சமுதாயம்!!!

அன்பிற்க்கு அம்மா!
புன்னகைக்கு அப்பா!
பாசத்திற்க்கு பெரிய அக்கா!
கலக்கலுக்கு சிறிய அக்கா!
இதுவரையில் புரிந்து கொள்ள முடியாத ஒரு உறவு, அண்ணி!
குழப்பத்தின் சிகரம் அண்ணன்!
சொகுசிற்கு கணவர்!
அதன் ஒரு எடுத்துக்காட்டு : மாமியார்!
நல்ல நட்பிற்க்கு சிறிய நாத்தனார்!
புலம்பலுக்கு பெரிய நாத்தனார்!
சும்மா ஒரு பேச்சிற்க்கு மட்டுமே மைத்துனர்கள்!
சோம்பல் உறவுகள், ஓரகத்திகள் எனப்படும் சகோதரிகள்!
பொறாமைப் பார்வை பார்க்கும் தூரத்து உறவுகள்!
நம்மை மீறத்துடிக்கும் பிள்ளைகள்!
எதற்க்கும் ஒத்து வராத அண்டை வீடுகள்!
இதுதான் நான் வாழும் சமுதாயம்!!!

Wednesday, May 23, 2007

சென்னை

விண்ணைத் தொடும் தென்னை மரங்களும்
கண்ணைக் கவரும் கடலோரமும் நாற்றமிக்க கூவக் கரைகளும்
அதில் ஒண்டி வாழும் ஓலைக் குடிசைகளும்
வானைத்தொடும் அடுக்கு மாடிகளும்,

அதில்மனதில் ஒட்டாத மனிதர்கள் வாழும் கலையும்
கோலோச்சும் கல்வி மையங்களும்

வால் வீசும் விளம்பர அட்டைகளும்
அடாவடி செய்யும் ஆட்டோக்காரர்களும்

அண்டிப் பிழைக்க வந்த தண்ணீர் தர மறுக்கும் அண்டை மா நிலமக்களும்
தண்ணீர் பஞ்சமென்றாலும், அதிசயமாய் ஒன்றாக வாழும் அனைத்து அண்டைவாழ் மக்களும்
சிறிய தெருக்களில் கூட லாவகமாகச் செல்லும் கார்களும்

30 அடி தெருக்கள் 6 லேன் சிஸ்டமாக வேலை செய்யும் மாயமும்சிக்னலுக்கு மதிப்புக் கொடுக்காத, படித்த மேதாவிகளையும்
அழகிய அபிராமி மாலும்,

அங்கே ஸ்னோ வோர்ல்ட் என்கிற பெயரில் மக்களுக்கு, அண்டர்டிகா பார்க்கும் அனுபவமும், அங்கேயும் கூட மூலைகளில் துப்பி ஸ்னோ மேலும், சிவப்புக்கோலம் போடும், நமது கலை விற்ப்பன்னர்களையும்
ஐனாக்ஸ் என்னும் பணம் பிடுங்கும் திரையரங்கமும், அதே சமயம், கமலா, ஜெயந்தி போன்ற 'சுகாதாரமிக்க' திரையரங்கங்களையும்
5 ஸ்டார், 3ஸ்டார், போன்ற, பெரிய ஓட்டல்களும்,

அவைகளுக்கெதிரிலேயே அமைதியாய் தொழில் செய்யும், சுண்டல் வண்டிகளும்
எங்கேயும் காணும், பூக்காரிகளையும், பழக்காரிகளையும், அவர்கள் பேசும் 'ரம்யமான' வார்த்தைகளும்!!!?!!!
அப்பப்பா!!! சொல்லிக்கொண்டே போகலாம், நமது சென்னையைப் பற்றி!!!

Wednesday, May 2, 2007

பெரியார் - திரைப்படம்

பெரியார் - திரைப்படம், நேற்று பார்த்தேன்। உண்மையிலேயே, வெகு நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படத்தைப் பார்த்த அனுபவம்।

சத்யராஜ், பெரியாராகவே வாழ்ந்து இருக்கிறார்। வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும், தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்। ஒரு மனிதனின், 92 வருட பயணத்தை, 3ஏ மணி நேரங்களில், காண்பிப்பது என்பது, மிகச் சிரமமான காரியம்தான். இயக்குனர், மிக நன்றாகக் கையாண்டு இருக்கிறார்.

படத்தின் முற்பகுதி, பெரியாரின், இளமைப் பருவமும், காதல், கல்யாணப்பருவமும், அவரது, எதிர்கால வாழ்க்கைக்யின், போக்கிற்க்கான அடிக்கல்களும், நம்மை ஒரு எதிர்பார்ப்போடு, நிமிர்ந்து உட்காரச் செய்கிறது। பிற்பகுதியில், அவரது கொள்கைகள், அவரது, கோட்பாடுகள், அவரது சிந்தனைகள், இக்கால சந்ததியினருக்கு, நல்ல விதத்தில் புரியும்படி சொல்லியிருக்கிறார்கள்। கடவுளா, கல்லா என்கிற பாட்டு, நம்மை சிந்திக்க வைக்கிறது. தாழ்ந்த சாதியினர் இன்று, தலை நிமிர்ந்து கோவிலுக்குள், தாம் எப்படி நுழைய முடிகிறது, என்று பெரியாரை நினைத்து, பெருமைப்பட்டுக்கொள்ளலாம். விதவைப்பெண்கள், கணவன் இறந்ததினால், அவர்களுடைய எதிர்காலம், இன்று, இருட்டறையில் இல்லாது, வாழ்க்கையில், ஒளியைக்க் காணும், மனோதிடம், எங்கிருந்து, வித்திட்டது என அறிந்துக் கொள்ளலாம். குலத்தொழில் என்று ஒன்றில்லாமல், செருப்பு தைப்பவன் பிள்ளை இன்று எப்படி, பொறியாளர் ஆக முடிகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

படம் நெடுகிலும், பெரியாராக வாழ்கிற சத்யராஜுக்கு, நிஜமாகவே விருது கொடுக்ககலாம்.
குஷ்பு, ஜோதிர்மயி, மனோரமா, தங்களது, திறம் பட நடிக்கும் திறனை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
மொத்ததில் பெரியார், தேவை நாட்டுக்கு. இன்றைய இளைஞர்களுக்கு!!!
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும், நவ நாகரீக மக்களுக்கு, மேல் நாட்டு மோகம் கொண்டு நம் நாட்டு நிலையறியாத மக்களுக்கு இப்படம், நிச்சயம், தன்னிலையை அறிந்து கொள்ள உதவும்.
சத்யராஜின் திரைப்பயணத்தில், இப்படம், ஒரு மைல்கல் என்பது, நிச்சயம்।

வேண்டும், இப்படிப்பட்ட படங்கள், நாட்டிற்கு।



Wednesday, April 18, 2007

மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு

அதிகாலை வேளை। மக்கள் தனது அன்றைய வாழ்வுக்கான அடிக்கல்களை போடும் நேரம். நான் என்னுடைய உடம்பில் உள்ள சர்க்கரையையும், கொழுப்பையும் குறைக்கும் நோக்கத்துடன் நடக்க ஆரம்பித்தேன்.

போகும் வழியில், ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியும், 65- 70 வயது மதிக்கத்தக்க ஒரு கிழவரும் எனக்கு முன் நடந்து கொண்டு இருக்கிறார்கள்। என் மனம் சொல்கிறது, ஆதங்கப் படுகிறது, எனக்கு வயதானால், இப்படி என் கணவர் என்னுடன் இப்படி ஆதரவாக வருவாரா, என்று. ம்ம்ம், யோசித்துக்கொண்டே அவர்களைத் தாண்டி செல்கிறேன்.

காத்தாடி ராமமூர்த்தியும் அவரது துணைவியாரும், எனக்கு முன்னே செல்ல அவர்களையும் தாண்டி செல்கிறேன்। என் மனது சொல்கிறது, என் வயது, அவர்களை இவ்வளவு எளிதாகத் தாண்டிச் செல்ல வைக்கிறது என்று. மனம் மீண்டும் அசை போடுகிறது. என்னுடன் , நடப்பவர்கள் பாதிக்கு பதி, இப்படிப்பட்ட முதியவர்கள் தான்.

இவர்கள் அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

இப்போதெல்லாம், தோராயமாக, மக்கள், 50 வயதிலேயே, பிள்ளைகளை ஏதோ ஒரு முறையில், இந்தியாவிற்க்குள்ளோ, அயல் நாடுகளிலோ, அவர்களது வாழ்வின் தரத்தை உயர்த்தி, நல்ல நிலைமைக்கு கொண்டு விட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்கிறார்கள்।

ஒதுங்கி விட்டவுடன், நிம்மதி என்று நினைத்து, தனிமை என்ற ஒரு நிலைமைக்குத் தள்ளப் பட்டுவிடுகிறார்கள்। கணவன் மனைவியைச் சார்ந்தும், மனைவி கணவனைச் சார்ந்தும் வாழ ஆரம்பிக்கிறார்கள். இடையில் , ஒருவருக்கு உடம்பு முடியாமல் போனால் அடுத்தவர் துடித்துப்ப் போகிறார்கள்.

இதைப் பார்க்கும் என் மனம், இவர்கள், வாழ்க்கையில் , ரயில் பயணம் செல்லும், ஒரு பயணியைப்போல் ஜீவிக்கிறார்கள் என்றே சொல்கிறது। எங்கே, தனது சகப் பயணி இறங்கி தாம் இன்னும் தனிமைக்குத் தள்ளப் பட்டுவிடுவோமொ என்று பயப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே காலத்தைக் கழிக்கிறார்கள். இருவரும் ஒன்றாகவே ரயிலை விட்டு இறங்க வேண்டுமென பேராசைப் படுகிறார்கள். பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் ஒரு எல்லக்குள்ளேதான் என்று உணர்கிறார்கள்.

இப்போது நாம் , முதலில் பார்த்த வயதான ஜோடிக்கு வருவோம்। வயதான அம்மாவிற்க்கு, நடக்க முடியாமல் போகிறது. தாத்தா ரொம்ப பயந்து போகிறார். "கீழே உக்காந்துக்க்கோ" என்கிறார். "வழியே என்கேயாவது, தண்ணீர் கிடைக்கறாதா என்று பார்க்கட்ட்டுமா" என்று கரிசனப்படுகிறார்.

இவர்களைக் கடந்து, திரும்ப வீடு நோக்க்கிச் செல்கிறேன் நான். என் மனம் கேட்கிறது?

What is the purpose of Life!!

Wednesday, April 11, 2007

Taking care of parents

Till last week, i was in a wrong assumption, that after a certain age, we need to take care of our parents. But it is not a must. My dad taught me this in reality. Now a days, most of the parents are financially strong and they have their own house/farm and they want to be independent. They do not want to be a burdon to anyone in the family. They want to cook, visit doctor, go to temples etc on their own. If needed like, while getting hospitalized or in need of immediate attention, with respect to manual help only, they go for their family attention. They never want to see their kith and kins worrying about them. My dad told, me that even I should not depend on my son / daughter on my old age. As far as possible, he tells me that he will not disturb his son/daughters financially or for any manual help too. In that way, there is no obligations are created among the human kind, he says. Same way he also lives and demonstrates his principles too. What a great man my dad is!!!

Sunday, March 11, 2007

Why I am Upset

I am upset today. For some reason. I am yet to know the reason. My mind by itself do not understand, but for some reason, I dont like the happenings around me. I dont like the people I meet. I dont like the topics they speak. I dont like to involve in those topics. I am just upset. People are so selfish. They all talk about their one self. No one wants to listen to other. Everyone hurts each other for some reason. Husband hurts wife and says nothing from the heart but. How to believe it. Son says to mother 'nothing i hurt' but for some reasons he does hurt her.
In this self oriented world, I do not know how to adjust and live with. Most of the time I feel I adjust and live with but people behave in the same way. No one wants to change and no one wants to see a change in their self.
People have strong notions about specific thoughts and they speak the same years to gether. People never analyse, they never feel for others. What they feel about themselves, they talk. They hurt others.
Only I am in this world, think about others. I never complain about my self. Even whenever I start to tell about my self and my hardships in my life, no one wants to listen. No one is giving importance to my feelings. This is a self oriented world. Everyone sees some kind of self gain in each topic they speak on or act upon.

I just want to get rid of this material world. I am into this family storm, where i dont find a way for it. One day, I will have my own time to spend upon and never never want to return back to this self oriented world. I dont like this societal behaviour. I dont like to be a part of it and play the same stereotyped music with everyone.

Just keep away. Never never return to this selfish world.

--msr


Tuesday, March 6, 2007

While walking........

To maintain our health everyone says...
... start to go for walking...
... atleast for 15 mts per day
... do some exercise
... atleast 2-3 small workouts

---hmmm... i am also into this spree to maintain my health. I have decided to maintain my sugar level by adding walking also as part of my life everyday. So going for a walk for 40-50mts.

Walking means the experts say...
-- should be regular
-- should be a swift fast pace walk
-- should not stand in the middle of the road and chat/gossip with a friend for 15 mts out of the 30 mts 'so called walk'
-- should not finish your vegetable, fruits shopping for the week.

It should be fully devoted to only to walk..walk...walk.. May be we are allowed to think on your day and plan for the day. But still need to be careful on the traffic of the road.

For the past few days, i have started to observe different kind of people while walking, starting from onyx guys to hifi - corolla owner, who comes for a so called 'walk' and having coffee/idli vadai from sangeetha. Only a few people i am seeing are devoted to walking and do it very seriously.
Some oldies just come out with a stick in a hand or a dog as a company, walk, meet a friend, sit at the posh slab put at the abiramapuram main roads, chat on all the political topics, come to sangeetha, eat nicely and indeed!! they start their day in a very good way, without even thinking they have come for a week.

Very few ladies, like me, wear hi fi shoes, walk for sometime and vanish. But they are all very inconsistent. We cannot see the same ladies every day. They come and stop doing walking after a few days.

Some middle aged men, have blue tooth fixed cellphones, speak loudly to some other software geek about some kind of their plans..blah blah...and walk walk... these guys also so unpredictable, and i cannot see them daily.

Some ladies, with their husbands i see them regularly to some extent, and for their spouse health they walk i suppose and they will be arguing, talking aloud of family matters and still they also are irregular and stop after some time.

Some young men, with a walkman/ipod ear plugs run..run..it would be nice to watch, but suddenly they will vanish after a few days..and will never return.

Some men, women, without even a shoes/proper chappels they walk, walk, do some exercises in between.......i see consistency in them, as they are the persons, who walk for their health and they have been instructed by their respective doctors about their seriousness.

health or wealth
both are hard to earn
but very easy to burn

---raji




Tuesday, February 20, 2007

Height of Selfishness

I consider height of selfishness, is not utilizing the inherent nature of the mankind called 'affection' at proper percentages to the near and dear of one.

Mankind alone has got the capability of showing affection, till one die, unlike any other creatures in the world. Mankind alone can shower the affection lifelong to its kith and kins.

Since selfishness is there available with every creature in the world and if a man wants to utilize to the most would be NOT extracting the capabilities of 'affection' to the respective kith and kins!! It will be so unfortunate if he / she does that.

Why I am Upset

I need someone who takes care of me!!!
I need someone who hears my tears!!!
I need someone who shoulders my troubles!!!
I need someone who hold my cries!!!

I need to go to a place where there is peace!!!
I need to go to a place where there is still water!!!
I need to go to a place where there is silence!!!
I need to go to a place where there is no conflicts!!!

I want to be a bird one day!!!
I want to fly all over the world!!!
I want to catch fish, if I want!!!
I want to build my nest wherever I want!!!


Monday, February 12, 2007

இன்றைய தமிழ் சினிமா

தமிழ் சினிமா, என்பது ஒரு பொழுதுபோக்கு வழிமுறையில் ஒன்றுதான் என்றாலும், இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமை, ரொம்ப வருந்தத்தக்கதாகத்தான் இருக்கிறது. இந்த நிலைமை இப்படியே போனால், எல்லோரும் திருட்டு விசிடியிலேயே இந்தப் படங்களைப் பார்த்துக்கொள்ளலாம், தவறொன்ரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
சனி, ஞாயிறு, இரு நாட்களும், தீபாவளி, பொறி, என்ற இரு, திரைப்படங்களயும், 80ரூபாய் செலவழித்து, பார்க்கவேண்டியதாகிவிட்டது. திரை விமர்சனம் வரும் முன்னறேயே, பார்க்கவேண்டும் என்று ஒரு எண்ணம்.


தமிழ் சினிமா இயக்குனர்கள், நிஜமாகவே, மக்களை, இப்படி, கொடுமைப் படுத்தவேண்டாம்.

பொறி : நல்ல கதைக் களம். நாயகனின் அப்பா, நிலம் வாங்கும் விவகாரத்தில் ஏமாந்து விடுகிறார். நாயகன், எப்படி, அதனைக்கண்டுபிடித்து, மக்களுக்கு, எடுத்துச் சொல்கிறார், என்பதுதான், கதையின் கரு. இக்கருவை, எப்படியெல்லாம் கெடுக்கலாமோ, அப்படியெல்லாம், கெடுத்து இருக்கிறார், இயக்குனர். இந்த, சமூக பிரச்சினையைக் காண்பிக்க, மன்மத ராசா ஸ்டைலில் பாடல் எதற்கு? அனாவசியமான, இழுவையான சண்டைக்காட்சிகள் எதற்கு?சிரிப்பு என்ற பெயரில் சீப்பான , மனதிலேயே ஒட்டாத காமெடிக் காட்சிகள் எதற்கு?வியாபாரிகள் சங்கம் ஆரம்பிக்க, ஜிகினாஸ்ரீ போன்றோரின் , பாடல்களை வைத்து, நம்மையெல்லாம், ஏன் இப்படி முட்டாளாக்குகிறார், இந்த இயக்குனர்.

அடுத்து தீபாவளி: மூன்றாம் பிறை போல , அழகிய கவிதையைப் படைத்த தமிழ் சினிமா, இப்படி ஒரு இழி நிலைக்குச் செல்ல வேண்டாம். நாயகன், என்ன வேலை செய்கிறான். ஒழுக்கமானவனா, என்றெல்லாம், இயக்குனருக்கு, கவலையே, இல்லை. நாயகி, பல முறை, அய்யோ பாவமாக முழிக்கிறார். அவர் பாவனா அல்ல, பாவமா!!!. வில்லனோ, வேறு வேலையே, இல்லாதது, போல், எப்போதும், கொலை செய்கிறார். அல்லது, ஒரு ரூமில் அடைந்து, கிடந்து, தூங்குகிறார். வில்லனைப் பார்த்தால் ரொம்ப பாவமாய் இருக்கிறது. நாயகனோ, நாயகி கிடைப்பதைத் தவிர வேறொன்றும், பெரியதாக நினைப்பதாகத் தெரியவில்லை. குரல் வளம் வேறு, எம்.ஜி.ஆரையே நினைவுப் படுத்துகிறது. பல இடங்களில் அவர் பேசுவது அவருக்கே புரிகிறதா என்று தெரியவில்லை.

இப்போது வரும், தமிழ் படங்கள் ஒரு பார்முலாவிலேயே, எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
1) ஆரம்பக் காட்சியில், கட்டாயம், ஒரு குத்துப்பாட்டு இருந்தாகவேண்டும்.
2) அடுத்தக்கட்டத்தில் நாயகன், நாயகியை ஏதாவது ஒரு வழியில், துரத்தி துரத்திக் காதலிக்க வேண்டும்.
3) அடுத்தக்கட்டத்தில் ஏதோ ஒரு பிரச்சினையில் நாயகன் மாட்டித்தவிக்க வேண்டும். இதிலிருந்து விடுபட, நாயகன், ஒரு பெரிய சைசு( நாயகனை விட)பெண்ணுடன் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆட வேண்டும்.
4) அடுத்தக்கட்டத்தில் வில்லனை நாயகன் நேரில் பார்க்காமலேயே கைத்தொலைப்பேசியில் சவால் விட வேண்டும். இதற்கு, பல கேமராக்கள் மூலம் ஒரு ஸ்பெஷல் எபெக்ட் கொடுக்க வேண்டும். பின்னணி இசை காதைப் பிளக்க வேண்டும்.
5) காதலியுடன் சமரசமாகி, வெளி நாட்டில் காதலி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, கண்களை விரித்து விரித்து காதலனைப் பார்த்து, இடையை நன்றாக தனியே ஆட்டி, காட்டி, ஆட வேண்டும்.
6) அடுத்தக்கட்டத்தில் காமெடி என்கிற பெயரில் ஒரு ஏமாளி நடிகர் இரட்டை அர்த்த வசனத்தில் பார்க்கும் மக்களை சங்கடத்த்தில் நெளிய வைக்க வேண்டும். அல்லது ஒரு கோமாளித்தனம் செய்து மற்றவர்களிடம் அடி வாங்க வேண்டும். அல்லது நாயகனைப் பாராட்டிக்க்கொண்டே இருக்க வேண்டும்.
7) நாயகனின் அப்பா அல்லது, காதலியை வில்லன், ஏதாவது நூதனமான முறையில் கொடுமைப் படுத்த வேண்டும்.
8) நாயகன், இம்முறை, வில்லனை நேரில் மிரட்டி, பெரிய, பெரிய சாக்கடை, அல்லது, சென்னையில் உள்ள குரும்பாலங்களில் ஓடி ஓடி, பிரண்டு, உருண்டு, சண்டை போட வேண்டும். உருட்டுக் கட்டை கொண்டு, எல்லோரையும் ஓங்கி , ஓங்கி அடிக்க வேண்டும். இதில், நாயகனின், தோழனாக இருந்த காமெடியன் அடி வாங்கி சாக அல்லது, ஒருபெரிய வசனம் பேசி தலை சாய்க்க வேண்டும்.
9) அடுத்து மன்மத ராசா ஸ்டைலில் மக்களை சாந்தப் படுத்த, ரத்த வெள்ளத்தப் பார்த்து அலுத்துப் போன மக்களை குஷிப் படுத்த காதலியுடன் அரை குறை ஆடையுடன் ஆட வேண்டும். 10) சட்டையில் ரத்தம் வழிய, ஒரு நீள வசனம் பேசி, மக்களை போர் அடிக்கச் செய்து, தான் செய்தது, அனைத்தும், இதற்க்குத்தான் என்று நாம் கொடுத்த 80 ரூபாய்க்கான நியாயத்தைக் கற்பிக்க வேண்டும்.

அய்யோ தமிழ் சினிமாவே!!! எங்கே போகிறாய்?

சவால் விடும் நாயகனையும், சும்மா வந்து போகிற அரை குறை அம்னீஷியா நாயகியையும், நல்லதே செய்து சாகிற அப்பாக்களையும், கெடுதல் செய்து, பிறகு திருந்தும் வில்லல்ன்களையும், கற்பிழக்கும் தங்கைகளையும், பார்த்து, பார்த்து மிகவும் வெந்து போகிறோம்.

தரமிக்க படங்களைக் கொடுத்து, தமிழை வாழ வையுங்கள்.

சமீபத்தின் தரமான தமிழ் சினிமா வரிசையில், சேரன் படங்களும், தங்கர் பச்சானின் சில படங்ககளும், மனிரத்னம், மற்றும் ஷங்கரின் சில படங்களும் அடக்கம் என்றே சொல்லலாம்.

Tuesday, January 30, 2007

வள்ளுவரின் பார்வையில்

"பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணு தரும்."
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல்பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலை குனிய வேண்டிய தாக் ஆகி விடும்.

"இல்லாள் கண் தாழ்ந்தை இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்."
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகின்ற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

"இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையோர் தோ ளஞ்சுபவர்."
அறிவும், பண்பும் இல்லாத மனைவி , அழகாக இருக்கிறாள் என்பதற்க்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள் , தங்களை தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்த பெருமையும் கிடையாது.

வயதீகம்.

ஏன் சில ஆண்கள், தனது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வதில்லை?
எனக்குத் தெரிந்த ஒருவர், அவருடைய மனைவி, அவரை, ரொம்ப பயமுறுத்துவதாக சொல்கிறார். ஏன் என்று கேட்டால், நான் எனது வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்த்து விட்டு வந்தால், மனைவி தூக்குப் போட்டுக் கொள்வேன் என்கிறாளாம். பிள்ளைகளைக் கொண்டு, அவர்களிடம் காட்டக் கூடாது என்று கட்டளையிடுகிறாளாம். பெற்றோர் அவர்களைத் தேடி வரக் கூடாது என்று ஊளையிடுகிறாளாம்.
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஐ.ஐ.டி யில் படித்து பெரிய வேலையில் இருக்கும், இந்த மனிதர், ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று. ஏன் இப்படி, தன்னுடைய மனைவிக்கு கைப்பாவையாகிவிட்டார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவருடைய படிப்புத் திறனிலும், வேலை பார்க்கும் திறனிலும், நான் வெகுவாக வியந்திருக்கிறேன். இப்படிப்பட்டவர், தனது 80 வயதான பெற்றோரை பெண்டாட்டி சொல் கேட்டு தனியே தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம், என்பது எனக்குப் புரியவேயில்லை. நன்றாய் பல விதமான கருத்துக்களை, நாட்டு நடப்புகளை, விஞ்ஞான கூற்றுக்களை பேசி அலசும் இந்த மனிதர், தனது, பெற்றோர் என்று வரும் போது மட்டும் நடந்துக்கொள்ளும் முறை முரண்பாடாக உள்ளதே?
இப்படிப்பட்ட மனிதர்கள் எந்த விதத்தில் சேர்த்தி ?

Friday, January 12, 2007

மனது


கடவுள் படைப்பில் மனிதனின் மனது என்பது அதீதமானது. இந்த மனதுக்குள் என்ன வேன்டுமானலும் அடைத்து வைக்கலாம். இதற்க்கு அளவே கிடையாது. 30ஜீபீ, 40ஜீபீ என்றெல்லாம் அடக்கி வைக்க முடியாது. கடலை விட ஆழமாக அளக்க முடியாதது மனது. இந்த மனதுக்குள் குப்பையும் இருக்கும், கூவங்களும் ஓடும், அதெ சமயம், ஆன்மீகமும் தவழ்ந்து கொண்டிருக்கும்.
மனது என்பதை கடவுள் படைப்பில் சற்று விசித்திரமானது. மூளையைப்போலில்லாமல் மனது எல்லொருக்கும், ஒரெ மாதிரியாகத்தான் படைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்பது என் கருத்து. ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும், முட்டாளாயிருந்தாலும், மனசாட்சி என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்பது என் கருத்து.
மனதென்னும் திரையரங்கில் என்ன படம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளலாம். இதைத் தடுப்பவர் யாரும் கிடையாது, நம் மனசாட்சியைத் தவிர. இப்படி குப்பைகளையும், கண்ட கண்ட எண்ணங்களைச் சேர்த்துக்கொண்டே போவதால், இந்த மனதுக்குள் பெரிய பூகம்பங்களும், சுனாமிகளும், பேரழிவுகளும் நிகழ்கின்றன என்றே கருதுகிறேன். அப்படியானால், இந்த மனதை அவ்வப்பொது சுத்தப்படுத்துதல் அவசியம் என்றே தோன்றுகிறது. ஏன் அவசியம் என்றால், என்னதான், அளவிற்க்கு அதிகமாய், நாம் மனதில் பாரத்தை சேர்த்துக்கொண்டே போனாலும், இந்த மனது தாங்கிக்கொள்கிறது என்பதால், நாம் கவலைப்படுவதேயில்லை. ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. மனதிற்க்கும் பாரம் என்று ஒன்று உண்டு. ஆகவே, மனபாரத்தால் விளையும் அழுத்தங்களை, களையெடுப்பது அவசியமாகிறது. இல்லையென்றால், மனிதன், மன அழுத்தங்களால், பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்க்கொலை என்னும் எண்ணங்களின் எல்லைக்குக்கூட சென்று விடுகிறான். என்னவானால் என்ன? எல்லவாற்றையும் விட்டு விட்டேன். எல்லோரையும் மன்னித்து விட்டேன் என்ற மனப்பான்மை, மனிதனுக்கு சாமானியமாய் வருவதில்லை. பாரம் ஏற ஏற மனிதன், பெருந்தன்மையை இழக்க ஆரம்பிக்கிறான் என்றே தோன்றுகிறது.இறுமாப்பிற்க்கு இறையாகிறான். ஆங்கிலத்தில் ஈகோ என்கிறார்கள்.
இந்த மனதை எப்படி சுத்தப்படுத்துவது என்பது பெரிய காரியம்தான். இரவி ஷங்கர் மாதிரியான குருமார்கள் மிகவும் எளிது என்கிறார்கள். பிராணயாமம், யோகா மூலம் மனதை சுத்தப்படுத்தலாம் என்கிறார்கள்.
சின்ன சிலேட்டுப்பலகையை துடைத்து சுத்தப்படுத்துதல் போல, மனதையும் சுத்தமாக்கலாமென்கிறார்கள்.
நான் முயன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும், பிராணயாமம், யோகா செய்து பாருங்களேன்.
மனித ஜென்மமாக பிறந்ததினால், மொத்தத்தில் நல்லவர்களாய் வாழ்ந்துவிட்டு போகவேண்டும் என்பதே என் விருப்பம்.
இன்றோடு, என்னைத் துன்பப்படுத்தியவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன் என்று சொல்லிப்பாருங்களேன், மிகவும் கடினம்தான், ஆனால் நன்றாக சுகமாக இருப்பதாய் உணர்வீர்கள்.
எனக்கு எதிரிகளே இல்லை என்று தினம் ஒரு முறை சொல்லிப்பாருங்களேன், மிகவும் இயல்பாக உணர்வீர்கள்.
இன்று புதிதாய் பிறந்ததாக நினையுங்களேன், பழைய குப்பையெல்லாம் மனதை விட்டுப் பறந்துவிட்டதாய் உணர்வீர்கள். இதன் தொடர்பான கதை ஒன்றை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
மனதை, மிக சுத்தமாய் வைக்க வைக்க, நம் எண்ணங்களும், செயல்களும், நிறைவாகச் செயல்படுவதை நான் உணர்கிறேன்.

Monday, January 8, 2007

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம்.

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம். அவருடைய பிறந்த நாள் இன்று. நாங்கள் நால்வரும் சென்று அருமையாய் கொண்டாடினோம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் பூலாங்குளத்தில் பிறந்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் விளையாடி, வளர்ந்து, படித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் சென்னை மா நகருக்குள் நுழைந்து, ரயில் பணி ஏற்று, அழகு இளைஞனாக, எங்கள் அன்னையை மணந்து, காதலித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பிள்ளை பேறு பெற்று
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர்களை அரும்பாடுபட்டு வளர்த்து,
என்னயும் இவ்வுலகிக்ற்கு காட்டி,
உங்கள் கனவு இல்லத்தை கட்டி
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஆரம்பித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் பேத்திகளை கொஞ்சி, எங்கள் அண்ணனை உயர் கல்வி படிக்க செய்து, அவர் நலம் கண்டு
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் என்னையும் திருமணம்செய்து கொடுத்து ஓய்வெடுக்க நினைத்த நேரத்தில், எங்கள் பேரன்புக்குரிய பெரிய அத்தானை இழக்க நேரிட்டு, பேத்தியரை சீராட்டி வளர்த்து
இரண்டாயிரம் ஆண்டு கண்டு, பேத்தியருக்கு திருமணம் முடித்து....... கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தியர் முதலான பேறுகளைப் பெற்று ........ அப்பப்பா உங்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.......
இவையெல்லாவற்றிற்கும் மேலாக எங்களை ஒழுங்கு நெறிமுறையில் வழி நடத்தி செல்லும் எங்கள் அன்பு தந்தையே!!! உங்களுக்கு எனது நூறு கோடி வணக்கம்!!!
நீங்கள், என்னை இவ்வுலகிற்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என பலமுறை நான் சிறுபிள்ளையாய் நினைத்ததுண்டு!
அதன் விளக்கத்தை இன்று காண்கிறேன்.....

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்வொர் பலர்
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்னவர் சிலரே.
அந்த சிலருக்குள் ஒருவராய் உங்களைக்காண்கிறேன்.

தூயொழுக்கம் உங்கள் மறு பெயர்
தியாகம் உங்கள் இயல்பு
அன்பு உங்கள் கண்கள்
ஆதரவு உங்கள் கைகள்
நேசம் உங்கள் பார்வை
பாசம் உங்கள் இருப்பிடம்
தமயந்தி(அம்மா) உங்கள் நிழல்


நீங்கள் நீண்ட நெடுங்காலம், எங்களை இப்படியே வழி நடத்தி செல்ல, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அப்பா உங்களுக்கு பிறந்த நாள் பரிசென்று ஒன்றும் கொண்டு வரவில்லை. ஏனென்றால் எந்தப் பரிசும் எனக்கு உகந்ததாகப்படவில்லை. நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாப்பரிசிற்கும் மேல். உங்களை விட மேலான பரிசு எனக்கு கிடைக்கவேயில்லை!!!
அப்பா உங்கள் வயது என்னைப்பொறுத்தவரை எட்டுதான். இந்த எட்டின் வலதுப்பக்கம் இருக்கும் பூஜ்ஜியம், வெறும் பூஜ்ஜியம் இல்லை. இந்த பூஜ்ஜியத்திற்குள் தான் உங்களின் இவ்வுலக அனுபவம் என்ற எண்பது ஆண்டுகள் அடங்கியுள்ளது. இந்த பூஜ்ஜியதிற்குள் இருக்கும் அனுபவ பாடங்களை , நான், எனது அக்காள் இருவர், எனது அண்ணன், எங்களைச்சர்ந்தவர்கள் என அனைவரும் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக அள்ளிப் பருகி வருகிறோம்.
எங்களை வழி நடத்தி செல்ல இந்த அனுபவம், பத்தாது என்று தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கை அனுபவம் இன்னும் அதிகமாக எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.!!!!!!


இனிதே தொடரட்டும் உங்கள் வாழ்க்கைப்பயணம்!!!
12-Jan-2007
உங்கள் அன்பு மகள்
ராஜேஸ்வரி சங்கர்