Tuesday, January 30, 2007

வயதீகம்.

ஏன் சில ஆண்கள், தனது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வதில்லை?
எனக்குத் தெரிந்த ஒருவர், அவருடைய மனைவி, அவரை, ரொம்ப பயமுறுத்துவதாக சொல்கிறார். ஏன் என்று கேட்டால், நான் எனது வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்த்து விட்டு வந்தால், மனைவி தூக்குப் போட்டுக் கொள்வேன் என்கிறாளாம். பிள்ளைகளைக் கொண்டு, அவர்களிடம் காட்டக் கூடாது என்று கட்டளையிடுகிறாளாம். பெற்றோர் அவர்களைத் தேடி வரக் கூடாது என்று ஊளையிடுகிறாளாம்.
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஐ.ஐ.டி யில் படித்து பெரிய வேலையில் இருக்கும், இந்த மனிதர், ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று. ஏன் இப்படி, தன்னுடைய மனைவிக்கு கைப்பாவையாகிவிட்டார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவருடைய படிப்புத் திறனிலும், வேலை பார்க்கும் திறனிலும், நான் வெகுவாக வியந்திருக்கிறேன். இப்படிப்பட்டவர், தனது 80 வயதான பெற்றோரை பெண்டாட்டி சொல் கேட்டு தனியே தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம், என்பது எனக்குப் புரியவேயில்லை. நன்றாய் பல விதமான கருத்துக்களை, நாட்டு நடப்புகளை, விஞ்ஞான கூற்றுக்களை பேசி அலசும் இந்த மனிதர், தனது, பெற்றோர் என்று வரும் போது மட்டும் நடந்துக்கொள்ளும் முறை முரண்பாடாக உள்ளதே?
இப்படிப்பட்ட மனிதர்கள் எந்த விதத்தில் சேர்த்தி ?

No comments: