Wednesday, August 22, 2007

மனிதர்கள் நிறைந்த சமுதாயத்தில் மரங்களுக்கு இடமேது?


எனது அலுவலகத்தின் வாசலில், அழகிய பூத்துக்குலுங்கும், மரங்கள் இருந்தன. 6வது மாடியில் இருந்து அழகாய் அவை அசைவதை ரசித்து இருக்கிறேன். மழைக்காலங்களில், அவை பசேலென்று கண்ணுக்கு விருந்தளித்ததை நினைவு கூர்கிறேன்.


மனிதன் நடக்கவும், காரில் சொகுசாய் போகவும், பாலம் கட்ட, மரங்கள், இடைஞ்சலாகிப் போனதால், வெட்டி வீழ்த்திவிட்டனர்.


என் மனம் அழுகிறது. மரமே, இங்கு மனித எண்ணிக்கை அதிகப் பட்டுவிட்டது, அதனால் மரங்களுக்கு இங்கு இடமில்லை!


எங்கேயாவது காட்டில், மறு ஜென்மம் எடுத்துக்கொள்!!!

No comments: