Friday, January 12, 2007

மனது


கடவுள் படைப்பில் மனிதனின் மனது என்பது அதீதமானது. இந்த மனதுக்குள் என்ன வேன்டுமானலும் அடைத்து வைக்கலாம். இதற்க்கு அளவே கிடையாது. 30ஜீபீ, 40ஜீபீ என்றெல்லாம் அடக்கி வைக்க முடியாது. கடலை விட ஆழமாக அளக்க முடியாதது மனது. இந்த மனதுக்குள் குப்பையும் இருக்கும், கூவங்களும் ஓடும், அதெ சமயம், ஆன்மீகமும் தவழ்ந்து கொண்டிருக்கும்.
மனது என்பதை கடவுள் படைப்பில் சற்று விசித்திரமானது. மூளையைப்போலில்லாமல் மனது எல்லொருக்கும், ஒரெ மாதிரியாகத்தான் படைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்பது என் கருத்து. ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும், முட்டாளாயிருந்தாலும், மனசாட்சி என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்பது என் கருத்து.
மனதென்னும் திரையரங்கில் என்ன படம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளலாம். இதைத் தடுப்பவர் யாரும் கிடையாது, நம் மனசாட்சியைத் தவிர. இப்படி குப்பைகளையும், கண்ட கண்ட எண்ணங்களைச் சேர்த்துக்கொண்டே போவதால், இந்த மனதுக்குள் பெரிய பூகம்பங்களும், சுனாமிகளும், பேரழிவுகளும் நிகழ்கின்றன என்றே கருதுகிறேன். அப்படியானால், இந்த மனதை அவ்வப்பொது சுத்தப்படுத்துதல் அவசியம் என்றே தோன்றுகிறது. ஏன் அவசியம் என்றால், என்னதான், அளவிற்க்கு அதிகமாய், நாம் மனதில் பாரத்தை சேர்த்துக்கொண்டே போனாலும், இந்த மனது தாங்கிக்கொள்கிறது என்பதால், நாம் கவலைப்படுவதேயில்லை. ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. மனதிற்க்கும் பாரம் என்று ஒன்று உண்டு. ஆகவே, மனபாரத்தால் விளையும் அழுத்தங்களை, களையெடுப்பது அவசியமாகிறது. இல்லையென்றால், மனிதன், மன அழுத்தங்களால், பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்க்கொலை என்னும் எண்ணங்களின் எல்லைக்குக்கூட சென்று விடுகிறான். என்னவானால் என்ன? எல்லவாற்றையும் விட்டு விட்டேன். எல்லோரையும் மன்னித்து விட்டேன் என்ற மனப்பான்மை, மனிதனுக்கு சாமானியமாய் வருவதில்லை. பாரம் ஏற ஏற மனிதன், பெருந்தன்மையை இழக்க ஆரம்பிக்கிறான் என்றே தோன்றுகிறது.இறுமாப்பிற்க்கு இறையாகிறான். ஆங்கிலத்தில் ஈகோ என்கிறார்கள்.
இந்த மனதை எப்படி சுத்தப்படுத்துவது என்பது பெரிய காரியம்தான். இரவி ஷங்கர் மாதிரியான குருமார்கள் மிகவும் எளிது என்கிறார்கள். பிராணயாமம், யோகா மூலம் மனதை சுத்தப்படுத்தலாம் என்கிறார்கள்.
சின்ன சிலேட்டுப்பலகையை துடைத்து சுத்தப்படுத்துதல் போல, மனதையும் சுத்தமாக்கலாமென்கிறார்கள்.
நான் முயன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும், பிராணயாமம், யோகா செய்து பாருங்களேன்.
மனித ஜென்மமாக பிறந்ததினால், மொத்தத்தில் நல்லவர்களாய் வாழ்ந்துவிட்டு போகவேண்டும் என்பதே என் விருப்பம்.
இன்றோடு, என்னைத் துன்பப்படுத்தியவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன் என்று சொல்லிப்பாருங்களேன், மிகவும் கடினம்தான், ஆனால் நன்றாக சுகமாக இருப்பதாய் உணர்வீர்கள்.
எனக்கு எதிரிகளே இல்லை என்று தினம் ஒரு முறை சொல்லிப்பாருங்களேன், மிகவும் இயல்பாக உணர்வீர்கள்.
இன்று புதிதாய் பிறந்ததாக நினையுங்களேன், பழைய குப்பையெல்லாம் மனதை விட்டுப் பறந்துவிட்டதாய் உணர்வீர்கள். இதன் தொடர்பான கதை ஒன்றை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
மனதை, மிக சுத்தமாய் வைக்க வைக்க, நம் எண்ணங்களும், செயல்களும், நிறைவாகச் செயல்படுவதை நான் உணர்கிறேன்.

No comments: