Tuesday, January 30, 2007

வள்ளுவரின் பார்வையில்

"பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணு தரும்."
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல்பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலை குனிய வேண்டிய தாக் ஆகி விடும்.

"இல்லாள் கண் தாழ்ந்தை இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்."
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகின்ற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

"இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையோர் தோ ளஞ்சுபவர்."
அறிவும், பண்பும் இல்லாத மனைவி , அழகாக இருக்கிறாள் என்பதற்க்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள் , தங்களை தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்த பெருமையும் கிடையாது.

No comments: