Wednesday, September 17, 2008

காத்திருத்தல்

வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒன்றிற்கு காத்திருக்க வேண்டிய தருணங்கள் உண்டு. அவைகளில் சில மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். சில மிகவும் துக்கக்தைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். சில கடுப்பைக் கிளப்பும் காத்திருத்தல்கள். சில நிம்மதியைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். நான் சந்தித்த சில காத்திருத்தல்களைக் இங்கு காண்போம்.

கடுப்பு காத்திருத்தல்கள்.
  1. மருத்துவ பரிட்ச்சைக்காக ஆஸ்பத்திரியில் காத்திருக்கும் சமயம், தெரிந்தவர்கள் மூலமாக உள்ளே நுழைவர்களைப் பார்க்கும் போது வரும் எரிச்சலும், கடுப்பும் சொல்லி மாளாது.
  2. பாஸ்போர்ட் அலுவலகத்தில் லைனில் காத்து நின்று கடைசியில் இது சரியில்லை, அது சரியில்லை என்று நிராகரிக்கப்படும் பொழுது வரும் கடுப்பிற்கு அளவேயில்லை.
  3. சரியான காலை வேளையில் அவசரமாக அலுவலகம் சென்று கொண்டிருக்கும் பொழுது, டிராபிக்க்கில் மாட்டிக்கொண்டு மெதுவாக ஊர்ந்து செல்லும் கடுப்பிற்கு நிகர் எதுவுமில்லை.

நிம்மதி/சந்தோஷமான காத்திருத்தல்கள்.

  1. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று ஆர்டர் வாங்கும் தருவாய்
  2. பிடித்தவர்கள், விமான நிலையத்தில் தரை இறங்கியவுடன் வரும் நிம்மதியே தனிதான்.

1 comment:

Anonymous said...

naaanum oru kaariyathirkaaga kaathirukurein... naaaan kaathirupathu nanmaikey endru enaku nambikkai undu