Monday, September 29, 2008

அம்மாவின் ஆசை


என் அம்மாவின் ஆசை தனது மகன் வயிற்று பேத்தியின் திருமணத்தை பார்க்கும் வரையிலும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால்பேத்தியின் கல்யாண நாள் அன்றும் உடல் நலமில்லாமல் போக வேண்டிய சூழ் நிலையாகி விட்டது. எப்படியோ என் அக்காவின் உதவியுடன் அப்போல்லோவில் ஒரு நாள் வைத்தியம் செய்து கொண்டு மணமக்களைப் பார்க்க வீடு திரும்பிவிட்டார்கள். உண்மையிலேயே என் அம்மாவின் மன உறுதியைப் பாராட்டத்தான் வேண்டும். அவர்களுக்கு இருக்கும் மன உறுதி நூற்றில் ஒரு பகுதி கூட எனக்கு கிடையாது என்றே சொல்ல வேண்டும். பேத்தியின் மணநாள் மாலையில் அவர்கள், மருத்துவ மனைக்கு சென்று வந்த சுவடே தெரியாமல் சோபாவில் உட்கார்ந்த்து இருந்ததை என்னால் என் வாழ் நாள் முழுதும் மறக்கவே முடியாது!!!

1 comment:

Anonymous said...

nalla thamizh kaettu pala naal aachu.. lovely post.. God bless your mom and her will power