Tuesday, November 30, 2010

என் இனிய திருப்பதி வெங்கடேஷ்வரா!!!

தாயின் கர்ப்பகிரஹத்திலிருந்து நான் வெளியேறிய அன்று ஆரம்பித்த
Push!!! Push!!! Push!!!
உன்னை தரிசித்து
உன் கர்ப்பகிரஹத்திலிருந்து ஒவ்வொரு முறையும் நான் வெளியே வரவும் கடும்
Push!!! Push!!! Push!!! செய்ய வைக்கின்றாயே!
இது முறையா?

தர்மத்தில் தரிசிக்க வரும் கூட்டம், எம்மைப் போல் கையூட்டு கொடுத்து வரும் கூட்டத்தோடு இணையும்
கட்டத்தில்
தர்மங்கள் ஏன் அதர்மங்களாகி எம்மை இம்சிக்கின்றது?
இந்நிலை மாறுமா?
எம் அடுத்த தலைமுறையும் தலைமுடி இறக்கி
அதர்மங்களை சந்திக்கும் நிலை வேண்டுமோ?

கருவறைகளும் பள்ளியரைகளும் மடப்பள்ளிகளும் கொழிக்கும் உனது கோவிலுள்
கழிவறைகள் இல்லாதது முறையோ?
பல மணி நேரம் கால் கடுக்க, முகம் கோண, மனம் வெதும்பி உன்னை தரிசித்து
வரும் உன் பக்தனுக்கு நீ காட்டும் பிரசாதப் பரிவு என்னை வியக்க வைக்கின்றது!
ஆனால்
பல மணி நேரம் நின்று உன்னை தரிசித்த உன் குழந்தைகள்
உடலுள் உள்ள இயற்க்கை கழிவை அடக்கி உன் பிரசாதம் உண்ட பின்
வெளியேற இயலுமோ?

மாற்றங்கள் கொண்டு வர மனிதனுக்கு சொல்லித் தர தேவையில்லை!
IIT களும், IIM களும், நிறைந்த நம் நாட்டில்
அறிவிற்கு பஞ்சமில்லை...
அளவு கடந்த அறிவாளிகள், கடல் கடந்து ஏற்றுமதி செய்யப்படுவதால்
ஆளின்றி தவிக்கிறோம்
மாற்றம் கொண்டு வர!

வெங்கடேஷ்வரா!!! எம்மை காப்பாற்ற உன்னாலும் முடியாது!!!

No comments: