Wednesday, December 9, 2009

ஒரு சின்ன நெருடல்...

அழகிய பூங்கா............
காலை நடை பயிற்சி ...........
அன்பான கணவன் தத்தி தத்தி நடக்க, ஆசையுடன் கைப்பிடித்த மனைவி உடனே வர......
கணவன் நடக்க மனைவி துணைக்கு.
அருகிலுருக்கும் திண்ணையில்
இருவரும் அவசரமாக அமர.. நானோ ஏனோ என பார்க்க...
எங்கிருந்தோ வந்தது ஒரு கைதொலைபேசி மனைவியின் கையில்..
இருவரும் மாற்றி மாற்றி கைத்தொலைபேசியில் யாரிடமோ உரையாடல்
என் நடை பயிற்சியின் ஒரு மணி நேர தருணம் முடிவிற்கு வர
கணவன் மனைவியிடம் , கைத்தொலைபேசி பத்திரம் , அப்புறம் குழந்தையிடம் பேச முடியாது என்று கூறுவது கேட்டது ..........
கைக்குழந்தையை மடியில் ஏந்தி, தூக்கி , கன்னத்தில் முத்தமிட்ட குழந்தை , இப்போது கைத்தொலைபேசியாக மாறியது ... காலத்தின் கோலம்.

No comments: