
இப்படியிருக்கும் கட்டத்தில் ஒரு பிச்சைக்கார கூட்டத்தையும் அதற்கு ஒரு தலைவனையும், இக்கூட்டத்திற்கு உதவும் ஒரு போலீசையும், பிச்சையேடுக்கும் சிறு பிள்ளைகளையும் காட்டி நெஞ்சை உருக்கும் காட்சிகளை நமக்கு கண் முன் நிறுத்துகிறார் பாலா. கடவுளே, இப்படி கூட மனித ஜீவன்கள் நம்மை சுற்றி வாழ்கின்றனரா என்று நம்மை அழ வைக்கிறார் பாலா.
இக்கூட்டத்தில் கண் தெரியாத குருட்டுப் பெண் அம்சவல்லியாக வந்து சேர்கிறார் பூஜா. அவர் மிக அருமையாக பாலா சொல்வதை செய்து இருக்கிறார். பூஜாவிற்கு கட்டாயம் அவார்டு கொடுக்கலாம். அவ்வளவு உணர்வு பூர்வமான, எதார்த்தமான நடிப்பு. பல இடங்களில் நம்மை நெகிழவும், பல இடங்களில் அழவும் வைக்கிறார். அவருக்கு எழுதப்பட்ட வலுவான வசனங்கள் அவருக்கு ரொம்ப கை கொடுக்கிறது. ஜெயமோகனின் வசனங்கள், பல இடங்களில் கை தட்ட வைக்கிறது. முக்கியமாக, ஒரு ஊநமுற்ர பிச்சைக்காரன் பேசும் வசனங்கள், நம்மை சிந்திக்க வைக்கிறது.
சில நெருடல்கள்: எப்படி பூஜா ஒரு சர்ச்சுக்கு போகிறார்? பிறகு எப்படி கொடுமைக்கார கும்பலிடம் திரும்பவும் சிக்கி கொள்கிறார் என்று சரியாகவே காட்டவில்லை.
ஏன் சில பாடல்களை விட்டு விட்டார்கள் எனத் தெரியவில்லை.
இப்படி ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சில இடங்களில் சிலர் வேற்று மொழியில் பேசும் பொது தமிழ் வரிகளாக்கி காட்டியிருக்கலாம்.
ஏன் சில பாடல்களை விட்டு விட்டார்கள் எனத் தெரியவில்லை.
இப்படி ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சில இடங்களில் சிலர் வேற்று மொழியில் பேசும் பொது தமிழ் வரிகளாக்கி காட்டியிருக்கலாம்.
அகொரியின் வயதான குரு சொல்லும் வசனத்தோடு படம் முடிகிறது.
நான் கடவுள். கொடுமைக்காரர்களை அழிப்பதும் கொடுமைகளை அனுபவிப்பர்களை அதிலிருந்து மரணம் என்கிற பெயரில் அவர்களை விடுவிப்பவதுமே அகொரியின் வேலை என்கிற வாக்கியங்களோடு முடிகிறது 'நான் கடவுள்'
No comments:
Post a Comment